-டீன்பைரூஸ்-
காத்தான்குடி:துல்ஹஜ் மாதத்தின் உழ்ஹிய்யா எனும் ஒப்பற்ற அமல் காத்தான்குடி அல்மானார் அறிவியல் கல்லுாரி வளாகத்தில் அதன் செயலாளர் நாயகம் அஷ்ஷெய்ஹ் அல்ஹாஜ் AMமும்தாஸ்(மதனி) BA தலைமையின் (04.10.2014 சனிக்கிழமை) பி.ப.01.00 மணியழவில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
ஹிறாபௌண்டேசன் மற்றும் அல்மனார் அறிவியல் கல்லுாரி என்பவற்றில் ஏற்பாட்டினில் இடம் பெற்ற உழ்ஹிய்யா இறைச்சி வினியோகத்தின் போது 09 மாடுகள், 11 ஆடுகள் அறுக்கப்பட்டு இறைச்சி வினியோகிக்கப்பட்டதாக அல்மார் நிர்வாக சபை உறுப்பினர் ஒருவா் தெரிவித்தார்.
மேற்படி உழ்ஹிய்யா இறைச்சியினைப் பெற காத்தான்குடி இமாம்கள், கதீப்மார்கள் சம்மேளனத்தில் அங்கம் வகிக்கும் உலமாக்கள் உட்பட சுமார் 1500 க்கும் மேற்பட்ட மக்கள் சமூகமளித்திருந்ததினை காணக்ககூடியதாக இருந்தது.







Leave a comment