கொழும்பு: ஹிஜ்ரி 1435 துல்ஹிஜ்ஜாஹ் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு இன்று 25ம் திகதி வியாழக்கிழமை மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது. கொழும்பு பெரிய பள்ளிவாசல் ஹமீதியா மண்டபத்தில் நடைபெறும் பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு இடம்பெற இருக்கின்றது.
இம்மாநாட்டில் உலமாக்கள், கதீப்மார்கள், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, முஸ்லிம் சமய கலாசார திணைக்கள பிரதிநிதிகள், சரீஆ கவுன்சில், மேமன் ஹனபி பள்ளி வாசல்கள், ஜும்ஆப் பள்ளிவாசல்கள் தக்கியா, ஸாவியாக்களின் நிர்வாகிகள் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
Published by
![cresent_moon[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/07/cresent_moon1.jpg?w=150&h=150)
Leave a comment