மலிங்கவுக்கு காலில் சத்திரசிகிச்சை: 16 வாரங்களுக்கு போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை!

Lasith-Malinga[1]கொழும்பு: இலங்கை கிரிக்கட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் லலித் மாலிங்க தமது இடது கனுக்காலில் ஏற்பட்டுள்ள உபாதைக்காக சத்திரசிகிச்சை ஒன்றின் நிமித்தம் இன்று அவுஸ்திரேலியாவுக்கு பயணமாகிறார். இந்நிலையில் 16 வாரங்களுக்கு அவரால் போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக 2015 உலக கிண்ண கிரிக்கட் போட்டிகள் ஆரம்பிப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்னரே அவரால் பயிற்சிகளில் ஈடுபட முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகள் 2015 பெப்ரவரி 14ஆம் திகதி அவுஸ்திரேலியாவிலும், நியூஸிலாந்திலும் ஆரம்பமாகின்றன. எனவே உலக கிண்ணப்போட்டிகளில் மலிங்கவின் பங்களிப்பு குறித்து சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

Lasith-Malinga[1]

Published by

Leave a comment