காத்தான்குடி: இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் காத்தான்குடி மன்றம் நடாத்தும் விஷேட மார்க்க சொற்பொழிவு எதிர்வரும் 29-08-2014 வெள்ளிக்கிழமை இஷாத் தொழுகையின் பின் 8 மணிக்கு காத்தான்குடி -03 முஹியித்தீன் மெத்தைப் பெரிய ஜூம்மா பள்ளிவாயலில் இடம்பெறும்.
இங்கு ‘நெருக்கடிகளுக்கு மத்தியில் இன்றைய முஸ்லிம் சமூகம்’ எனும் தலைப்பில் விஷேட மார்க்க சொற்பொழிவை இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் அமீர் (தலைவர்) உஷ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் நிகழ்த்தவுள்ளார்.
இதில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் காத்தான்குடி மன்றம் வேண்டுகோள் விடுக்கின்றது.
Published by


Leave a comment