‘ பலஸ்தீன் : யூதர்களின் உரிமையா? ‘ காத்தான்குடி மெத்தைப் பள்ளிவாயலில் வெள்ளிக்கிழமை விஷேட மார்க்க தெளிவுரை மகாநாடு

palastineSL Youth

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.

காலத்தின் தேவைகருதி இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 08/08/2014 அதாவது வெள்ளிக்கிழமை மஃரிப் தொழுகையை தொடர்ந்து காத்தான்குடி முகைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆப் பள்ளிவாயலில் ‘பலஸ்தீன் : யூதர்களின் உரிமையா?’ என்ற தலைப்பில் அஷ்ஷெய்க் MHM. யஹ்யா (பலாஹி, பின்னூரி) அவர்களால் ஆண்களுக்கான விஷேட மார்க்க தெளிவுரை மகாநாடு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் யூதர்கள் பற்றிய ஓர் அறிமுகம், யூதர்கள் பற்றி அல்குர்ஆனும் நபிமொழியும், முஸ்லிம் உம்மத்தின் முதல் கிப்லா, பலஸ்தீன் ஏன் தாக்கப்படுகிறது, யூதர்களுக்கு நாம் எவ்வாறு உதவுகிறோம், பலஸ்தீன் மக்களுக்கு நாம் செய்யும் உதவிகளும் எமது கடமைகளும் மற்றும் இன்னும் பல உப தலைப்புகளில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.

எனவே அனைத்துப் பொதுமக்களையும் உரிய நேரத்திற்க்கு சமூகமளித்து இறுதிவரை கலந்து கொண்டு பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

palastine

Published by

Leave a comment