பாலமுனை இஸ்லாமிய கலாசார வழிகாட்டல் மையத்தின் ஏற்பாட்டில் நபி வழியில் நோன்பு பெருநாள் தொழுகை- பாலமுனை நடுத்துறை கடற்கரையில்
– பழுலுல்லாஹ் பர்ஹான்
பாலமுனை: காத்தான்குடி-பாலமுனை இஸ்லாமிய கலாசார வழிகாட்டல் மையத்தின் ஏற்பாட்டில் நபி வழியில் புனித ஈதுல் பித்ர் நோன்பு பெருநாள் தொழுகையும்,பெருநாள் குத்பா பிரசங்கமும் வழமை போன்று இன்ஷா அல்லாஹ் பாலமுனை நடுத்துறை கடற்கரையில் காலை 6.20 மணிக்கு நடாத்தப்படவுள்ளதாக பாலமுனை இஸ்லாமிய கலாசார வழிகாட்டல் மையத்தின் தலைவர் ஏ.எச்.எம்.அமானுல்லாஹ் தெரிவித்தார்.
இதில் அனைத்து இஸ்லாமிய சகோதர சகோதரிகளையும் கலந்து கொள்ளுமாறு பாலமுனை இஸ்லாமிய கலாசார வழிகாட்டல் மையம் வேண்டுகோள் விடுக்கின்றது.
Leave a comment