‘சரத் பொன்சேகாவின் நிலையே சோபித தேரருக்கும் ஏற்படும்’

Sarath-Fonseka_1[1]– SHM

கொழும்பு: கடந்த 2010 ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட சரத் பொன்சேகாவின் நிலையே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாக கூறும் மாதுளுவேவ சோபித தேரருக்கு ஏற்படும்’ என்று இளைஞர் வலுவூட்டல்துறை அமைச்சர் டளஸ் அழகப்பெரும நேற்று தெரிவித்தார்.

‘2010ம் ஆண்டு ஏனையவர்களின் உந்துதலால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட சரத் பொன்சேகா அதில் தோல்வியடைந்தார். அவர் இன்று உரசிப்பார்த்து வீசப்பட்ட லொத்தர் டிக்கெட்டை போன்ற நிலைக்கு உள்ளாகியுள்ளார்’ என்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால் அரசாங்கம் சரத்பொன்சேகாவை உள்வாங்குவதில் எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment