திருகோணமலை: கடந்த 05 வருடங்களாக திருகோணமலை மாவட்டத்தில் சமூக நல்லினக்கத்தைக் கருத்தில் கொண்டு கிழக்கு மாகாண சபை வீதி அபிவிருத்தி, நீரப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணமும், கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை யின் ஏற்பாட்டில் இம்முறையும் புனித ரமழான் மாதத்தின் இப்தார் எதிர் வரும் 18.07.2014 வெள்ளிக் கிழமை திருகோணமலை இந்துக் கலாச்சார மண்டபத்தில் 2000 பேர் கலந்துகொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டடுள்ளது.
இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாண முதமைச்சர், மாகண சபை அமைச்சர்கள், ஆளுங்கட்சி எதிர் கட்சி உறுப்பினர்கள், மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், மதத்தலைவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், மதரஸா மாணவர்கள், பாடசாலை அதிபர் ஆசிரியர்கள், மாணவிகள் உள்ளுர் அரசியல், சமூகப் பிரமுகர்கள் என பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
Published by



Leave a comment