காத்தான்குடி: காத்தான்குடி கால்பந்தாட்ட லீக்கினால் (KFL), காத்தான்குடியில் நடாத்தப்பட்ட ஹிஸ்புல்லாஹ் கிண்ணத்துக்கான மாபெரும் கால்பந்தாட்டச் சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டி, எதிர்வரும் 20–6-2014 வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு காத்தான்குடி மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற இருக்கின்றது.
இவ் இறுதிப்போட்டியில் காத்தான்குடி சவுண்டர்ஸ் கழகமும், ஏறாவூர் லக்கி ஸ்டார் கழகமும் மோதவுள்ளன.
இறுதிப்போட்டி நிகழ்வுக்கு, பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், பிரதம அதிதியாகக் கலந்துகொள்ள இருக்கின்றார்.
இச்சுற்றுப்போட்டியில் 12 கால்பந்தாட்ட அணிகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Published by

Leave a reply to badood Cancel reply