கொழும்பு: இலங்கைக்கான இந்திய பிரதி உயர்ஸ்தானிகராக நீண்ட காலம் பணியாற்றி புதுடில்லிக்கு மாற்றலாகிச் செல்லும் பி. குமரன், நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமை 10 இன்று செவ்வாய்க்கிழமை (10) முற்பகல் நீதியமைச்சில் சந்தித்து பிரியாவிடை பெற்றுக்கொண்டார்.
இங்கு தமது பதவிக் காலத்தில் பிரதி உயர்ஸ்தானிகர் குமரன், இனப் பிரச்சினை தீர்வு விவகாரம், இருநாட்டு நல்லுறவு என்பவற்றில் அதிக அக்கறை செலுத்தி வந்தார்.
இதன் போது அமைச்சர் ஹக்கீம் அவரது சேவையைப் பாராட்டினார்.
Published by



Leave a comment