லண்டன்: சுமார் 3 மாதங்களுக்கு முன்பு மலேசியா ஏர்லைன் விமானம் ஆர்-370 மாயமானது. நிலையின்மை என்ற விந்தையான போர்வைக்குள் மூடியிருக்கும் மர்மங்களினால், பதில்களை விட கேள்விகள் தான் குவிந்து கொண்டே செல்கிறது.
கடுந்துயரத்தில் இருந்த பயணிகளின் உறவினர்கள் தேடும் முயற்சியை கைவிட்ட போதிலும், பல விதமான சூழ்ச்சி கோட்பாடுகள் எழுந்துள்ளது.
தற்போதுள்ள விமான தொழில்நுட்பம், அதன் ஆற்றல் மற்றும் சந்தேகம் படும்படியான எதையும் மோப்பம் பிடிக்கும் திறன் போன்றவைக்கு மத்தியில், மலேசியா விமான ஏர்லைன் MH-370 மீது எண்ணிலடங்கா கேள்விகள் எழுந்துள்ளது.
கோலாலம்பூரை விட்டு கிளம்பிய நேரத்தில் இருந்து, MH-370 விமானத்தால் 3000 மைல் தூரம் பறந்திருக்க முடியும். அப்படிப் பார்த்தால் டிகோ கார்ஸியா இந்த எல்லைக்குள்ளே வந்து விடும்.
MH-370 விமானத்தின் அலை வாங்கிச் செலுத்தி பழுதாகி விட்டது. மின்சார செயலாற்றல் காரணமாக கூட இது நடந்திருக்கலாம்.
ஆனால் ஒன்று. அலை வாங்கிச் செலுத்தி பழுதாகி விட்டதென்றால், விமானத்தால் நீண்ட தூரம் பறந்திருக்க முடியாது. காரணம் அலை வாங்கிச் செலுத்தி பாதிப்பு, மின்சார அமைப்பு செயலாற்றல் என சுட்டிக் காட்டியிருக்கும்.
இதோ ஒரு முரண் நகைப் பண்பு. அலை வாங்கிச் செலுத்தி பழுதான ஒரு மணிநேரத்திற்கு பிறகு, ராடார் கருவியில் விமானம் தென்பட்டுள்ளது. விமானத்தின் கொள்ளளவை கொண்டு பார்க்கையில், மின்சார செயலாற்றலுடன் விமானத்தால் அவ்வளவு தூரம் பறந்திருக்க முடியாது. பொதுவாக அப்படிப்பட்ட அமைப்பு செயலாற்றலின் போது, விமானத்தை அவசரமாக தரையிறக்கம் செய்து விடுவதே விமானியின் வழக்கம். ஆனால் அருகில் தரையிறக்கம் செய்ய வேண்டிய இடம் ஒரு மணிநேரத்திற்கு குறைவான இடத்தில் இருந்த போதிலும் அதை ஏன் அவர் செய்யவில்லை?
அப்படியானால் அலை வாங்கிச் செலுத்தியை வேண்டுமென்றே விமானி அணைத்திருக்க வேண்டும். அப்படி செய்து விமானத்தை வேண்டுமென்றே நொறுங்க வைக்க நினைத்திருந்தால், விமானத்தின் பல பகுதிகள் தண்ணீரில் மிதந்திருக்க வேண்டும்.
ஒரு வேளை, ராணுவ ஏவுகணையால் அது தாக்கப்பட்டிருந்தால், கண்டிப்பாக அது ராடாரில் பதியப்பட்டிருக்கும்
ஒவ்வொரு விமானத்திலும் 30 நாட்களுக்கு சிக்னல் அனுப்பும் கருப்பு பெட்டி இருக்கும். இந்த கருப்பு பெட்டி வெடி விபத்திலும் அழியாது. அதனால் அதன் சரியான இடத்தை அது வெளிக்காட்டியிருக்கும்.
அடுத்து, டிகோ கார்ஸியா என்ற தீவிற்கு அமெரிக்க விமானத்தை கடத்தியுள்ளது என்ற சர்ச்சை எழுந்துள்ளது. அப்படியானால் அப்பாவிகளை அவர்கள் ஏன் கடத்த வேண்டும்? இன்னமும் என்ன நடந்தது என்பது சரியாக தெரியவில்லை. குறித்த மலேசிய விமான விடயத்தில் இன்னும் இருட்டில் இருக்கும் நாம் வெளிச்சத்தை அடைய இன்னும் எத்தனை நாள் ஆகுமோ?
Published by

Leave a comment