கொழும்பு: ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பேலியகொட நகர சபை உறுப்பினர் ஷமில சந்தருவான் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். அவர் தனது காரில் பயணித்து கொண்டிருந்த போது, களனி டயர் சந்திப் பகுதியில் வைத்து இனந்தெரியாத துப்பாக்கிதாரி அவரை சுட்டுக்கொன்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நகர சபை உறுப்பினர் சடலம் அவரது காரில் இருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. 23 வயதான இந்த நகர சபை உறுப்பினர் அமைச்சர் மேர்வின் சில்வாவின் தீவிர ஆதரவாளர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by



Leave a comment