கொழும்பு: ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, நாளை ட்விட்டர் மூலம் கேள்விகளுக்கு பதிலளிக்கப் போவதாக அறிவித்துள்ளார். கொழும்பில் உலக இளைஞர் மாநாட்டை நேற்று ஜனாதிபதி தொடங்கி வைத்தார். அந்நிகழ்ச்சியில் உரையாற்றிய ஜனாதிபதி, ‘இளைஞர்களாகிய நீங்கள் அனைவரும் ட்விட்டரில் இணைந்திருப்பதை நான் அறிவேன்’.
நாளை (வியாழக்கிழமை) ட்விட்டர் வழியே நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் நீங்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்றார். @PresRajapaksa என்பதுதான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சேவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் முகவரி.
இதில் நாளை முற்பகல் 11.30 மணி முதல் 45 நிமிட நேரம் இந்த கேள்வி பதில் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. முன்னதாகவே #WCY2014MR ஹொஸ்டக் மூலம் கேள்விகளை அனுப்பியும் வைக்கலாம் என்று ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
Published by


Leave a comment