காத்தான்குடி: புதிய காத்தான்குடி பிரதேசத்தில் தக்வா பள்ளிவாயல் வீதியில் வசிக்கும் முகம்மது சரிபு முகம்மது நிஸார் ஆசிரியர் மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம். அப்துல்லாஹ் முன்னிலையில் 29-04-2014 இன்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு மாவட்ட நீதி நிருவாக வலயத்துக்கான சமாதான நீதவானாக சத்தியப்பிரமானம் செய்து கொண்டார்.
காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலையில் பட்டதாரி ஆசிரியராக கடமையாற்றிவரும் இவர் காத்தான்குடி தாருல் அதர் அத்தஅவிய்யா அமைப்பின் பொதுச் செயலாளராகவும்,ஸாஜில் மீடியா நெட்வொர்க் நிறுவனத்தின் ஆசிரியராகவும் இருப்பதுடன் காத்தான்குடி அந் நாஸர் வித்தியாலயம், காத்தான்குடி மத்திய மகா வித்தியாலயம் ஆகியவற்றின் பழைய மாணவருமாவார்.
பல்வேறு சமூக சேவை அமைப்புக்களில் இணைந்து ஒரு சமூக சேவையாளராக செயற்படும் இவர் எம்.ஐ.எம்.சரீப், பி.எம்.பாத்திமா ஆகியோரின் புதல்வருமாவார்.
Published by


Leave a comment