ஏலத்துக்கு வரும் டைட்டானிக் கடைசிக் கடிதம்

titanicலண்டன்: டைட்டானிக் கப்பலில் இருந்து எழுதப்பட்டிருக்கக் கூடிய கடைசி கடிதம் பிரிட்டனில் ஏலத்தில் ஒரு லட்சத்து ஐம்பதினாயிரம் டாலர்களுக்கும் அதிகமாக விலைபோகலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அந்தக் கப்பல் நீரில் மூழ்குவதற்கு சில மணி நேரம் முன்னதாக இந்தக் கடிதத்தை, அதில் பயணித்த எஸ்தர் ஹார்ட் என்னும் பெண், லண்டனில் இருந்த தனது தாயாருக்கு எழுதியுள்ளார்.

அந்த விபத்தில் உயிரிழந்த எஸ்தரின் கணவரின் கோர்ட் பாக்கட்டில் அந்தக் கடிதம் கடைசியாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தனது கோர்ட்டை அவர் தனது மனைவி எஸ்தர் குளிரில் இருந்து தப்புவதற்காக அவருக்கு கொடுத்ததால் அந்தக் கடிதமும் தப்பியுள்ளது.

titanic

Published by

Leave a comment