காத்தான்குடி: ஒரு காலத்தில் வெளியூருக்கு சென்று வருவோர் தங்களது வீடுகளுக்கு வெளிநாட்டுப் பழ வகைகளான அப்பிள், கிரேப்ஸ் மற்றும் ஒரேன்ஜ் ஆகிய பழவகைகளை குறிப்பாக கொழும்பிலிருந்து வாங்கி வரும் பழக்கம் இருந்து வந்தது.
அது மாத்திரமன்றி வெளிநாடுகளில் இருந்து ஊருக்கு வருவோரும் மேற்படி பழவகைகளை வெளிநாடுகளிலிருந்தே வாங்கி வந்திருந்ததும் வழக்கமாக இருந்தது.
எனினும் உலகில் பிரபல்யமான பழங்கள் தற்பொழுது காத்தான்குடியில் கிடைக்கின்றன. காத்தான்குடி பிரதான வீதி, பிரதான பஸ் நிலையத்துக்கு அருகாமையில் காணப்படும் பழக்கடைகளுள் சில தூங்காத கடைகளாக இருபத்து நான்கு மணிநேரமும் வாடிக்கையாளர்களுக்காக காத்திருக்கின்றன.
பயணங்கள் காரணமாக இரவு மற்றும் அதிகாலைகளில் ஊருக்கு வருபவர்களும் இக்கடைகளில் தங்களுக்குத் தேவையான பழங்களை வீடுகளுக்கு வாங்கிச் செல்கின்றனர்.
கண்ணை கொள்ளை கொள்ளும் வகையான உள்ளுர் மற்றும் வெளிநாட்டு பழவகைகள் வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கேற்ப வரிசைப்படுத்தி அழகாக காட்சி தருவதை இங்கு காண முடிகிறது. அதுமாத்திரமன்றி, வெளியூர்களிலிருந்து சுற்றுலா வரும் பொதுமக்களும், மாணவ மாணவிகளும் வாகனங்களைத் தரித்து இங்கு பழவகைகளை வாங்கிச் செல்வதையும் பல நேரங்களில் காண முடிகிறது.
காத்தான்குடி பிரதான வீதி, பஸ் நிலையத்துக்கு அருகாமையில் காணப்படும் தூங்காத பழக்கடைகளில் ஒன்றினை வாசகர்கள் இங்கு காணலாம்.
Published by


Leave a comment