தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு கா-குடி 164 ஏ கிராம சேவகர் பிரிவில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு

unnamedபழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள காத்தான்குடி-05 164 ஏ கிராம சேவகர் பிரிவில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று 06-04-2014) ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றது.

பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகர் க. ஜெய்சங்கர் தலைமையில் நடைபெற்ற இவ் விழிப்புணர்வு நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.பி. நபீல், 164 ஏ கிராம சேவை உத்தியோகத்தர் ஏ.யூ.ஏ புவாத், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி அமீனுல்லாஹ் மற்றும் 164ஏ பிரிவு மகளிர் சங்க அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர்.

இதன் போது வீடு வீடாக சென்ற அக் குழுவினர் டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகக் கூடிய இடங்களை பார்வையிட்டு பொது மக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியதுடன் அவற்றை துப்பரவு செய்வதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர். 

unnamed (1)

Published by

Leave a comment