கம்பஹா: லிய அபிமன் நடவடிக்கை மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் இணைந்து ஒழுங்கு செய்த பெஷில் ராஜபக்ஷ சவால் கிண்ண கரப்பந்தாட்ட போட்டிகள் கடந்த 22 மற்றும் 23ம் திகதிகளில் கம்பஹா நகரசபை மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டிகளில் 100 அணிகள் வீதம் கலந்துகொண்டன. அதேவேளை¸ போட்டிகளில் வெற்றிபெற்ற பெண் மற்றும் ஆண் அணிகளுக்கு 100 000 ரூபா மற்றும் சிறந்த வெற்றி பெற்ற அணிகளுக்கு 75 000 ரூபாவும் பரிசுகள் வழங்கப்பட்டன. தேசிய இளைஞர் சேவைகள் மன்ற தலைவர் சட்டத்தரணி லலித் பியும் பெரேரா தலைமையில் நடைபெற்றது. இங்கு போட்டியில் கலந்து கொண்ட அணிகள் 100க்கு விளையாட்டு உபகரணங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.
இதன் ஆரம்ப நிகழ்வு கடந்த 22ம் திகதி மு.ப 09.00 மணிக்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெஷில் ராஜபக்ஷ பிரதம அதிதியாக கலந்து கொண்டு கிண்ணம் ,பரிசுகளை வழங்கி வைத்தார் .
ஏனைய பிரமுகர்கள் விஷேட அதிதிகள் கலந்து கொண்டனர். இசை நிகழ்ச்சி ஒன்றும் நடத்தப்பட்டமை விசேட அம்சமாகும்.
Published by

Leave a comment