டீன் பைரூஸ்
காத்தான்குடி: காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் புனர் நிருமானம் செய்யப்பட்டு விஸ்தரிக்கப்பட்ட தீவிர சிகிச்சைப் பிரிவு, மற்றும் அதி தீவிர கண்கானிப்புப் பிரிவு என்பன பிரதியமைச்சர் அல்ஹாஜ் MLAM. ஹிஸ்புல்லாஹ் MA/MP அவர்களினால் திறந்த வைக்கப்பட்டதுடன் மனநல பிரிவு விடுதிக்கான அடிக்கல் நடும் நிகழ்வும் வைத்தியசாலையில் இடம்பெற்றது.
இவ் வைபவத்தில் பிரதம அதிதியாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் அல்ஹாஜ் MLAM. ஹிஸ்புல்லாஹ்MA/MP அவர்கள் கலந்து கொண்டதுடன், கௌரவ அதிதியாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக்Eng அவர்களும் ஏனைய வைத்தியர்கள், தாதிமார்கள். அதிகாரிகள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் போது அதிதிகளால் வைத்தியசாலை வளாகத்தினுல் ஞாபகார்த்தமாக மரம் நடும் நிகழ்வும் இடம் பெற்றது.





Leave a comment