-டீன் பைரூஸ்-
காத்தான்குடி:காத்தான்குடி குர்ஆன் மதரசாக்கள் அபிவிருத்திச் சங்கத்தின் அல்குர்ஆன் இறுதிpப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பரிசளிப்பு வைபவம் காத்தான்குடி மெத்தை பெரிய ஜூம்ஆ பள்ளிவாயலில் (09.03.2014 ஞாயிற்றுக்கிழமை) நடை பெற்றது.
இரண்டாவது நிகழ்வாக இடம் பெற்ற மேற்படி பரிசளிப்பு வைபவம் குர்ஆன் மதரசாக்கள் அபிவிருத்திச் சங்கத்தின் கௌரவ தலைவர்,சங்கைக்குரிய ஷைகுல் பலாஹ் அல்ஹாஜ் மௌலவி; ஆயு.அப்துல்லாஹ்(றஹ்மானி)அவர்களின் தலைமையில் நடை பெற்றது.
இன்றைய நிகழ்வில் சுமார் 300 க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு சாண்றிதழ்கள் மற்றும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
ஆல்குர்ஆன் மதரசாக்கள் அபிவிருத்திச் சங்கத்தினால் நடாத்தப்பட்ட பரீட்சையில் 197 அதி கூடிய புள்ளிகளைப் பெற்ற காத்தான்குடி அன்னூர் மதரசாவினைச் சேர்ந்த் மு.க.பாத்திமா திக்றா என்ற மாணவி சங்கைக்குரிய ஷைகுல் பலாஹ் அல்ஹாஜ் மௌலவி MA.அப்துல்லாஹ் (றஹ்மானி) அவர்களினால் பொண்ணாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
மேற்படி நிகழ்வுக்கு கண்ணியமிக்க உலமாக்கள்,ஊர் பிரமுகர்கள்,பெற்றோர்கள்,மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்னர்.







Leave a comment