காத்தான்குடி: தற்பொழுது கடுமையான வெப்பநிலை காத்தான்குடி பிரதேசத்தில் நிலவி வருவதால் காத்தான்குடி கடற்கரையை அழகுபடுத்தும் இரு பிரதான நீரோடைகளுள் ஒன்று வற்றிப் போய் ஓர் மைதானம் போல் பரிதாபமாகக் காட்சி தருகின்றது.
சிறுவர்களின் சிறந்த மீன்பிடி பொழுது போக்கும் இடமாகவும், மனதைக் கொள்ளை கொள்ளும் இடமாகவும், பறவைகளின் சரணாலயமாகவும், மீன்களின் உறைவிடமாகவும் இருந்து வந்த இந்த நீரோடை, காத்தான்குடி கடற்கரை சிறுவர் பூங்காவிற்கு (அப்ரார் பள்ளி வீதிக்கு) அருகாமையில் அமைந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment