மனங்களை வென்ற மகாத்மா! மர்ஹூம் சேர்மன் முகம்மது காசிம் ஹாஜியார்

cassim hajiகவிஞர் – இல்மி அஹமட் லெவ்வை

துருப்பிடித்தப்போன
இரும்புப் பெட்டகத்தின்
தாழ்பாழை
தலையை கொடுத்து திறந்தேன்!

-0-
அங்கே…
முலாம் மங்காத -ஓர்
மூத்த முகவரி!
ஐந்தாம் குறிச்சியில் – ஓர்
சமூக விடிவெள்ளி
விளித்தது….
முஹம்மதிப்றாஹீம்
வரிச முத்தும்மாவுக்கு
புதல்வராய் …

-0-
அது
இருண்ட பூமிக்குள்,
நீதி- நேர்மை- நியாயம் – என்ற
கொள்கை
குத்து விளக்குகளை
ஏந்திக்கொண்டு
புறப்பட்டது..
சமூக விடியலுக்காய் !

-0-
மணவயதில்
மணந்தார்
நான்காம் குறிச்சி
நங்கை பாத்தும்மாவை!
-0-
கால்நூற்றாண்டுகளுக்கும்
மேலாய்
காத்தபதியின்
நகராட்சிமன்றின் – நல்
முதல்வராய் பூத்த
மூத்தபதி இவர்
-0-

இது
இனியும் எழுதப்படாத
எங்கள்
மண்ணின்
தங்கக் காலம் -என
தவிக்கிறார் தாய்க்குலம் இன்றும்

-0-

கோடைகாலத்துக்
குளத்தைப் போல…
இவரது வங்கிப்புத்தகமும்
வறண்டு கிடந்ததாய்
வரலாறு சொல்கிறது.!

-0-

ஆனாலும்
அந்த ஆத்மா
வெந்து வடியும்
கண்ணீருக்காய்
விடியும் வரை
உழைத்தது!

-0-

அதனால்
மனித மஹாத்மா -என
மனங்களைத் தொட்டார்!

-0-

இவற்றோடு
இலஞ்சம், ஊழல், மோசடி – என்ற
சமூகொள்ளி நச்சுப் பாம்புகளும்
சந்துக்குள்ளேயே
சமாதியாகிப்போகின
அந்தக்காலத்தில்…
-0-

படமாளிகைக்கு
இடமளிக்காது
துரத்திய
தூரநோக்கும், 
வாடிவீடுகட்ட வந்த
கோ(கே)டிகளுக்கு
குனியாத போக்கும்-இன்று
இஷுலாமிய தேசமென்று
இன்றைய
இளைய தலைமைகள்
இலட்சனை
பலகை எழுத உதவிற்று!
-0-

பொது விளையாட்டு மைதானம்
மக்கள் சந்தை -இவைகள்
சிலாகித்து சொல்லும்
முதன்மை சாதிப்புகள்!
-0-

இவரது பொற்காலத்தில்
‘மின்சாரம்’
முதற்தடைவையாய்
ஒளிர்ந்து
மனங்கள்
பனிமலாராய் பூரித்தது!
சூரியனைக்கண்டு
மலரும் காந்தி மலர்களைப்போல
கல்வி கலாச்சாரம்
எல்லாமே
களை கட்டத் தொடங்கியது!
-0-

அரிக்கும் ‘அரிசியில்’
அரைபிடியாவது
அள்ளிக் கொடுத்து
உதவுங்கள்- என்று
‘ஜாமிஅதுல் பலாஹ்வை’
பகலிரவாய்
இமையால் காத்து
இமயமாக்கினார்.
-0-

மக்களோடு மக்களாய்
மார்க்கட் சதுக்கத்தில்
மடிகாலிலிருந்து கொண்டே
‘பஞ்சாயத்து’
நடாத்துவார்

-0-
இவற்றுக்கப்பால்;….
இலட்சங்களும்,
கோடிகளும் இவரைத்
தேடிய போதும்
அழ்ழாஹ்வுக்கே அஞ்சினார்!
-0-

அதனால்
களுகுகள் -நோக்கி
அவரை
வட்டமிட்டபோதும 
வெற்றி முரசு கொட்டி
வெள்ளமாய் மக்கள்
சுமந்து வந்தார்கள்!
காற்றுப்போன பலூனாய்
தோற்றுப் போனது
துரோகிகள் கூட்டம் !
-0-

மட்டுமா?
காதரும், கந்தசாமியும்
கட்டிப்பிடித்து
இவரது மறைவில்
கதறிய ஓலங்களில்
ஊரே சோகத்தால்
உறங்கிப்போனது!
-0-

இவைகள்
நாம் காணும்
இன்றைய
இனநல்லுறவுக்கான
நேற்றைய அஷ்திவாரங்கள் !
-0-

என்ன செய்வது
எழுபதுகளில் -இந்த
இமயம் -இயல்பாய்
இறையடி சென்றத!

-0-

மூத்த மண்
பூத்த மண் – அவர்
இமையால் காத்தபதி
கண்ணீரால்
குளித்தது!

Published by

Leave a comment