காபூல்: ஆப்கானிஸ்தானில் ராணுவ மையத்தை குறிவைத்து தலீபான்கள் நடத்திய தாக்குதலில் 19 ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர். மேலும் 7 ராணுவ வீரர்களை தலிபன்கள் கடத்திச் சென்றுள்ளனர். ஆப்கானிஸ்தானின் குனார் மாகாணத்தில் உள்ளராணுவ மையத்தின் மீது தலீபான்கள் இன்று அதிகாலைத் தாக்குதல் நடத்தினார்கள்.
இதில் அங்கிருந்த 19 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், 7 ராணுவ வீரர்களை தாலிபன் தீவிரவாதிகள் கடத்தி சென்றுள்ளனர். இத்தகவலை அம்மாகாண அரசு உறுதி செய்துள்ளது. பாகிஸ்தானின் எல்லைப்பகுதியில் உள்ள காஜியாபாத் மாவட்டத்தில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. தலீபான்களால் கடத்தப்பட்ட ராணுவ வீரர்களை மீட்கும் நடவடிக்கையில் அந்நாட்டு ராணுவம் ஈடுபட்டுள்ளது.
Published by
![_57976976_afghan_kandahar_oct10[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/05/57976976_afghan_kandahar_oct101.gif?w=150&h=84)
Leave a comment