கொழும்பு: இலங்கையில் எதிர்வரும் 2014 மே மாதம் நடைபெறவுள்ள ஆசியாவிலேயே நடக்கும் முதலாவது உலக இளைஞர் மாநாட்டுக்கு ஐ.நா. சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார். இந்த உலக இளைஞர் மாநாட்டில் 2015 ஆம் ஆண்டுக்கு பின்னராக அபிவிருத்தி திட்டம் குறித்து கவனம் செலுத்தப்படவுள்ளது.
கொழும்பில் நடைபெறும் இந்த மாநாட்டுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவன் அழைப்பை, இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அலகப்பெரும தலைமையிலான குழு ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் விடுத்தது. நியூயோர்க்கில் இருக்கும் ஐ.நா.தலைமையகத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போதே பான் கீ மூன் உலக இளைஞர் மாநாட்டுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இதில் தனது இரண்டாவது தவணைக்காலத்தில் தனது பிரதான திட்டத்தில் இளைஞர்களுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக பொதுச் செயலாளர் வலியுறுத்தினார். ‘உலக சனத்தொகையில் பாதிக்கும் அதிகமானவர்கள் 25 வயதுக்கும் குறைவானவர்களாவர். இதுதான் இளைஞர் உலகமாகும்’ என்று பான் கீ மூன் குறிப்பிட்டார். தொடரும் வேலையில்லா பிரச்சினை மற்றும் இளைஞர்களுக்கு அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் வாய்ப்பு வழங்குவது உடன் தீர்வு காணப்படவேண்டிய பிரச்சினைகள் என்று அவர் சுட்டிக்காட்டினார். ‘இளைஞர்களி;ன மேம்பாட்டுக்காக இலங்கை முன்னெடுக்கும் செயற்பாடுகள் திருப்தியடைகிறேன்’ என்று குறிப்பிட்ட அவர்,
ஐ.நா. மனித உரிமை உயர்ஸ்தானிகர் நவநீதன் பிள்ளை, இலங்கை இளைஞர் பாராளுமன்றத்தின் பாரிய வெற்றி குறித்தி மகிழ்ச்சி தொரிவித்ததையும் நினைவுகூர்ந்தார்.
இலங்கை ஜனாதிபதியின் அழைப்புக்கு நன்றி தெரிவித்த பொதுச் செயலாளர் பான் கீ மூன், தனது வேலைப்பழுவுக்கு மத்தியிலும் இந்த தனித்துவமான நிகழ்வில் பங்கேற்க கொழும்பு வருவதற்கு முழு முயற்சி எடுப்பதாக உறுதி அளித்தார்.
கொழும்பு மாநாட்டுக்கான ஏற்பாடுகளை செய்ய உதவிய பொதுச்செயலாளரின் இளைஞர் தூதுக்குழு மற்றும் ஐ.நாவுக்கு அமைச்சர் அழகப்பெரும, பான் கீ மூனிடம் தனது நன்றியை தெரிவித்துக்கொண்டார். ‘தேசம் என்ற வகையில் இளைஞர் மாநாடு எமது தேசத்தை கட்டியழுப்ப துணைபுரியும் என்று நாம் நம்புகிறோம்.
இந்த மாநாட்டின் மூலம் இளைஞர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களால் வெளியிடப்படவிருக்கும் கொழுப்பு இளைஞர் செயற்திட்டம் 2015 ஆம் ஆண்டுக்கு பின்னரான பல்துறை செயற்பாடுகள் குறித்து கவனம் செலுத்தப்படுத்தப்படும். இந்த செயற்திட்டம் இளைஞர்களின் பிரதான தேவைகளை கருத்தில் கொண்டு ஏழு அடிப்படை விடயங்கள் மற்றும் ஏழு கருப்பொருள்களைக் கொண்டு வகுக்கப்படவுள்ளது’ என்றும் அவர் கூறினார்.
ஐ.நா.வுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிட பிரதிநிதி பாலித்த கொஹன்ன கூறும்போது, ‘இளைஞர்களின் இன்றை தினம் பற்றியே அவதானிக்க வேண்டுமே ஒழிய நாளையதைப் பற்றியல்ல. அவர் அரசு அமைப்பது மற்றும் தேசிய கொள்கையில் பங்களிப்பு செய்ய வேண்டும். கொள்கை வகுப்பு மற்றும் அதிகார வட்டத்தில் இறைஞர்களின் ஆலோசனை மற்றும் அபிலாசைகள் உள்வாங்கப்பட வேண்டும். இதனாலேயே இலங்கை அரசு மாநாட்டு ஏற்பாடுகளுக்காக உலக இளைஞர் தலைவர்கள் 20 பேரைக் கொண்ட செயலணி ஒன்றை ஏற்படுத்தியுள்ளது’ இதன்போது அண்மையில் வெளியிடப்பட்ட இலங்கையின் இளைஞர் கொள்கைதிட்டத்தின் பிரதியை ஐ.நா. செயலாளர் நாயகத்திடம் அமைச்சர் அழகப்பெரும கையளித்தார்.
இலங்கையில் கடந்த நவம்பரில் ஹம்பாந்தோட்டையில் வெற்றிகரமாக முடிவடைந்த பொதுநலவாய இளைஞர் மாநாடு குறித்து தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் லலித் பியும் பெரேரா விளக்கினார்.
மாநாட்டின் சர்வதேச இளைஞர் செயலணி உறுப்பினர்களான கிறிஸ்டோபர் டெக்கி மற்றும் ஜயத்மா விக்ரமநாயக்க, மாநாட்டிற்கான ஏற்பாடுகள் குறித்து விபரித்தனர். இந்த மாநாட்டிற்கு 1500 பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெளியிடப்படவிருக்கும் ஆவணம் குறித்து ஆலோசனைகளுக்கான பல்துறை நிபுணர்களும் பங்கேற்கிறனர்.
ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் மேலும் குறிப்பிடும்போது, முதல் முறை இளைஞர் பிரதிநிதி நியமிக்கப்பட்டது மற்றும் இளைஞர்களுக்கான பரந்த செயற்திட்டமொன்று உருவாக்கப்பட்டது மற்றும் இளைஞர்களுக்கான உள்ளக நிறுவனம் ஒன்றை உருவாக்கியது, ஐ.நா. தன்னார்வ தொண்டர்கள் என்று ஐ.நா கொள்கையில் இளைஞர்களுக்கு பிரதான இடம் வழங்கப்பட்டுள்ளது. இதில் சொச்சி ஒலிம்பிக் போட்டியில் ஆயிரக்கணக்க்hன தன்னார்வ தொண்டர்கள் பணியாற்றுவதையும் அவர் நினைவுகூர்ந்தார்.
இந்நிகழ்வில் இளைஞர் விவகார மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சருடன் ஐ.நாவின் இலங்கைக்கான நிரந்தர வதிவிட பிரதிநிதி பாலித்த கொஹன்ன, தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் பொதுச் செயலாளர் லலித் பியும் பெரேரா, இலங்கைக்கான ஐ.நா. தூதுக்குழுவின் அமைச்சு ஆலோசகர் வருனா சிரி தனபால மற்றும் சர்வதேச இளைஞர் செயலணி உறுப்பினர்களான ஜயத்மா விக்ரமநாயக்க (இலங்கைக்கான தூதுக்குழுவின் மூன்றாவது செயலாளர்) மற்றும் கிறிங்டோபர் டக்கி (ஐ.எம்.சி.சி.-பக்ஸ் ரொமானா-அமெரிக்கா மற்றும் சிரியா)
Published by



Leave a comment