கொழும்பு: இலங்கையின் தேசிய இளைஞர் கொள்கை வெளியீடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் 14 ம் திகதி பி.ப 6.00 மணிக்கு கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெறும். நாட்டில் பல இடங்களில் இருந்து இளைஞர், யுவதிகள் 5000 பேர் பங்கேற்கின்றனர்.
இரங்கை இளைஞர் சமூகத்துக்காக தேசிய இளைஞர் கொள்கை வெளியீடு முதல் முறையாக இம்முறை 03 நிறுவனங்களின் பங்களிப்புடன்இடம்பெறுகிறது. இதில் இளைஞர் விவகாரம் மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சு, மக்கள் கருத்துதொடர்பில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், இலங்கை திறந்த பல்கலைக்கழகம் ஆகியனவாகும்.
தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்துக்கு இளைஞர் சமூதாயம் மிகவும் அவசியமானதாகும். இவ்வேலைத்திட்டத்தை இலகுவான வழி மூலம் கொண்டு செல்ல தேசிய இளைஞர் கொள்கை அவசியமாகும். 2011 ஆண்டுமக்கள் சனத்தொகை எண்ணிக்கையின் 4.4 மில்லியன் இளைஞர் சமூதாயம ஆகும். மொத்த சனத்தொகையில் இது 23சதவீதமாகும் ஆகும்.
இளைஞர் சமூகத்துக்காக இத்துடன் தேசிய இளைஞர் கொள்கை வெளியீடு குறைந்தளவில் இளைஞர் விவகாரம் மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அலகப்பெருமவின் கருத்துப்படிதேசிய இளைஞர் சேவைகள் மன்றத் தலைவர் சட்டத்தரணி லலித் பியும் பெரேராவின் வழிகாட்டலுடன் இத்தேசிய இளைஞர் கொள்கை வெளியீட திட்டமிடப்பட்டுள்ளது.
இளைஞர் தேவைகள் தொடர்பில் மற்றும் அத்தேவைகளை பூர்த்தி செய்ய இலகுவான வழி ஒன்றின் மூலம் உட்செல்லல் அவசியம். அதில் பல்வேறுதுறைகளுடன தொடர்புடைய அறிவுள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் பல்கலைக்கழக இளைஞர் சமூகம் சாதாரண மக்கள் மற்றும் இளைஞர் குழுவுடன கலந்துறையாடி பெற்றுக்கொண்ட கருத்துக்கள் இந்தத்தேசிய இளைஞர் கொள்கையில் இணைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இளைஞர் கொள்கையை உருவாக்குவதற்காக பழமை வாய்ந்த முறைகள் உண்டு. இருந்தும் அம்முயற்சி வெற்றியளிக்கவில்லை. அம்முயற்சி இன்றைய சமூகத்தில் வெற்றியை கொடுத்துள்ளது. தெற்காசிய நாடுகளில் தேசிய இளைஞர் கொள்கை இல்லாத நாடாக இலங்கை உண்டு என்பதை மாற்றுவோம்.
Published by

Leave a comment