-டீன் பைரூஸ்-
காத்தான்குடி:காத்தான்குடி சமூக பொருளாதார கல்வி அபிவிருத்தி அமைப்பு ”SEEDO” வின் ஏற்பாட்டினில் சமூகப் பணிகளை செய்து வரும் மூவருக்கு அண்மையில் சமாதான நீதவான் நியமனக் கடிதம் வழங்கப்பட்டது.இதன் போது உரையாற்றிய நடேசலிங்கம் குமனன் ”முஸ்லிம்களை பெரிதும் நேசிக்கின்றேன்….சீடோவின் சிறப்பான பணிகளை நான் பாராட்டுகின்றேன்“ எனத் தெரிவித்தார்.
மேற்படி நிகழ்வு :சமூக பொருளாதார கல்வி அபிவிருத்தி அமைப்பின் தலைவர் ABM.ஜௌபர் JP தலைமையில் நடை பெற்றது. இந்நிகழ்வுக்கு காத்தான்குடி நகர சபை உறுப்பினர் சல்மா அமீர்ஹம்ஸா MA/JP.சமூா்த்தி உத்தியோகஸ்தர் MSM அப்துல்லா JP, புதிய காத்தான்குடி பெரிய ஜூம்ஆ பள்ளிவாயல தலைவர் அல்ஹாஜ்.KLM. றஹீம் JP, சிவில் பாதுகாப்பு பொறுப்பதிகாரி Mr.S.செல்வராசா (SUB INSPECTER) உட்பட சீடோவின் அங்கத்தவர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது…..மட்டக்களப்பினை சோ்ந்த நடேசலிங்கம் குமனன், முகம்மது ஜௌபர், எம்.எஸ்.எம். ஜெஸீம் ஆகியோர்களுக்கு அதிதிகளால் நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டது.
Published by




Leave a comment