உலகுக்கே செய்தி சொல்லி ஊருக்குப் பெருமை சேர்த்தாய்..

majeedகாத்தான்குடி – மதியன்பன்

ஊடகத் துறைக்குள் வந்து
 ஊன்றியே கால் பதித்து
தேடியே செய்தி தன்னை
 திக்கெட்டும் திரட்டித் தந்து
ஈடிலாச் சேவை செய்து
 இதயத்துள் இடம் பிடித்த
வாடிடா இணையத் தளமே
 வாழ்த்தினேன்.. யுவ காத்தான்குடியே..!

******************

ஆண்டுகள் இரண்டு தன்னை
 அமைதியாய் கடத்தி விட்டாய்..
நீண்டது உந்தன் பயணம்
 நினைவுகள் மீட்டிப் பார்த்தேன்
தாண்டிய தடைகள் சொல்ல
 தனியொரு ஏடு வேண்டும்
வேண்டினேன் இன்னும் வளர
 விருப்பமே.. யுவ காத்தான்குடியே..!

*********************

உலகுக்கே செய்தி சொல்லி
 ஊருக்குப் பெருமை சேர்த்தாய்..
பலமிக்க ஊடகம் என்னும்
 பட்டத்தைப் பெற்றுக் கொண்டாய்..
இலக்குகள் இன்னும் உண்டு
 இமயம் நீ காண வேண்டும்..
துலங்கிட வாழ்த்துச் சொன்னேன்
 துணிவுதான்.. யுவ காத்தான்குடியே..!

majeed

 

 

 

Published by

Leave a comment