டெல்லி: லட்சக்கணக்கில் குழந்தைகளும், வயது வந்தோரும் இன்னும் படிப்பறிவின்றி இருக்கும் தற்போதைய சூழலில், 2015 ஆம் ஆண்டிற்குள் அனைவருக்கும் கல்வி என்ற தனது இலக்கிலிருந்து இவ்வுலகம் நழுவக்கூடிய சாத்தியத்தை படைசாற்றுவது போல் இருப்பதாக யுனைட்டெட் நேஷன்ஸ் (யுஎன்) அமைப்பு ஒன்று கூறியுள்ளது.
யுனைட்டெட் நேஷன்ஸ் அமைப்பு உலகம் முழுவதும் உள்ள ஒரு ஆய்வை நடத்தியது. இதில் பல ஆய்வில் பல முக்கிய காரணிகளை மையமாக கொண்டு துவங்கப்பட்டது, இதன் பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தது என் இந்த அமைப்பு தெரிவித்தது.
இதில் படிப்பறிவில்லாத மக்கள் எந்த நாட்டில் அதிகமுள்ளனர் என்ற ஆய்வும் அடங்கும். உலகில் இந்தியாவில் தான் படிப்பறிவில்லாத முதியோர்கள் அதிக அளவில் உள்ளனர், அதாவது உலகெங்கிலும் இவ்வாறு படிப்பறிவின்றி வாழும் மக்களின் எண்ணிக்கை 287 மில்லியனாக உள்ளது இது உலக மக்கள் தொகையில் சுமார் 37 சதவீதம் என்று யுனெஸ்கோவின் Educationa For All (EFA) குளோபல் மொனிட்டரிங் தகவலறிக்கை தெரிவிக்கிறது.
‘2008 ஆம் ஆண்டில், ஈஎஃப்ஏ குளோபல் மொனிட்டரிங் தகவலறிக்கை ‘அனைவருக்கும் கல்வி என்பதை சாதிக்க முடியுமா?’ என்று கேள்வியெழுப்பியிருந்தது.
2015 ஆம் ஆண்டு வருவதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவான அவகாசமே இருக்கும் இத்தருணத்தில் அவ்விலக்கை எட்டுவது சாத்தியமன்று என்று அதே தகவலறிக்கை கூறுகிறது‘ என்று யுனெஸ்கோ டைரக்டர் ஜெனரலாக பதவி வகிக்கும் ஐரினா பொக்கோவா இவ்வறிக்கையில் கூறியுள்ளார்.
Published by
![book[2]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/01/book2.jpg?w=150&h=133)
Leave a comment