மனத்தூய்மை மனித வாழ்வில் செலுத்தும் தாக்கம்

imageகத்தாரிலிருந்து அஷ்ஷெய்க் பழுளுல்லாஹ் பஹ்ஜான் (அப்பாஸி)

டோஹா: தொழில் நிமித்தம் கடல் கடந்து வாழும் இஸ்லாமிய நெஞ்சங்களுக்கு வாராந்தம் கட்டாரில் இயங்கும் ஸ்ரீலங்கா இஸ்லாமிய தஃவா நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் பயான் நிகழ்ச்சி இன்று வியாழக்கிழமை இரவு 08.30மணிக்கு கட்டார் அல்மனா டவருக்கு பின்னால் அமைந்துள்ள மஸ்ஜித்அப்துல் அஸீஸ் அல் கஷ்ஷாபில் நடைபெறவுள்ளது.

இதற்கமைவாக இன்ஷா அல்லாஹ் இவ்வாரம் ‘மனத்தூய்மை மனித வாழ்வில் செலுத்தும் தாக்கம்’ எனும் கருப்பொருளில் பயான் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இரவு 08.30 மணிமுதல் 9.30மணி வரை இரு நிகழ்ச்சிகளாக நடைபெறவுள்ள இந்நிகழ்வில் கலந்து கொண்டு பயன்பெருமாரு கட்டாரில் இயங்கும் ஸ்ரீலங்கா இஸ்லாமிய தஃவா நிலையம் வேண்டிக்கொள்கிறது.

கடல் கடந்து வாழும் சகோதரர்கள் முடியுமானவரை ஈமானை அதிகரிக்கச் செய்யும் இவ்வாறான நிகழ்வுகளில் கலந்து கொண்டு ஈமானிய உள்ளங்களாக மாறுவோம்.

Published by

Leave a comment