மும்பை: நரேந்திர மோடிக்கு ஆதரவாகக் களமிறங்கியிருக்கும் நடிகர் சல்மான்கானின் படங்களைப் புறக்கணிக்குமாறு இந்திய இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். தற்பொழுது பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் ஆதரவாளராக மாறியுள்ளார் நடிகர் சல்மான்கான்.
குஜராத் கலவரத்துக்காக மோடி மன்னிப்பு கேட்க தேவை இல்லை என்று அவர் கூறியுள்ளார். சல்மான்கானின் இந்த கருத்து முஸ்லிம்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. சல்மான்கானுக்கு எதிராகப் போராட்டங்களும் நடந்து வருகின்றன. தனது செயலுக்கு சல்மான் அளித்த விளக்கத்தையும் யாரும் ஏற்கவில்லை.
இந்நிலையில் நேற்று சல்மான்கானுக்கு எதிரான ஒரு கூட்டு அறிவிப்பை இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் வெளயிட்டார்கள். அதில், ‘குஜராத்தில் நடந்த கலவரத்துக்காக மோடி மன்னிப்பு கேட்க தேவை இல்லை என்று சல்மான்கான் கூறி இருப்பது உள்நோக்கம் கொண்டது. இஸ்லாமியர்களின் உணர்வை அவர் காயப்படுத்தியுள்ளார்.
எனவே சல்மான்கான் நடித்த படங்களை பார்க்காமல் முஸ்லிம்கள் புறக்கணிக்க வேண்டும். அவர் மன்னிப்பு கேட்கும் வரை இந்த புறக்கணிப்பை நீட்டிக்க வேண்டும். நரேந்திர மோடி தன் இமேஜை உயர்த்திக் கொள்வதற்காக எதையும் செய்வார். இது சல்மான்கானுக்கு தெரியுமா?
குஜராத் கலவரத்தின் போது பெண்களும், குழந்தைகளும் அடைந்த வேதனையை அவர் அறிவாரா? அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர் ஏதாவது உதவிக்கரம் நீட்டினாரா?‘ என்று அதில் குறிப்பிட்டுள்ளனர்.
Published by


Leave a comment