இலங்கைக்கான சுவிஸர்லாந்து தூதுவருக்கும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத் தலைவருக்குமிடையேயான சந்திப்பு

unnamed (10)பழுலுல்லாஹ் பர்ஹான்

கொழும்பு: இலங்கைக்கான சுவிஸர்லாந்து தூதுவருக்கும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத் தலைவருக்குமிடையேயான சந்திப்பு அண்மையில் கொழும்பிலுள்ள தூதரகத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் எதிர்வரும் ஏப்பிரல் மாதம் இலங்கையில் இடம்பெறும் சர்வதேச இளைஞர் மாநாடு மற்றும் இளைஞர்களின் எதிர்கால திட்டங்கள் இதர விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதாகவும் மன்றத்தின் தலைவர் சட்டத்தரணி லலித் பியூம் பெரேரா தெரிவித்தார்.

இச்சந்திப்பில் மன்றத்தின் பணிப்பாளர் மிலிந்த ராஜபக்ஷவும் கலந்து கொண்டார்.

இருவருக்குமிடையில் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் மன்றத்தின் தலைவர் தூதுவருக்கு நினைவுச்சின்னம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது. 

unnamed (10)

Published by

Leave a comment