காத்தான்குடி: காத்தான்குடி லஜ்னதுஸ்ஸூன்னா அந்தபவிய்யா அமைப்பின் ஏற்பாட்டில் கொழும்பு ஜம்மியதுஷ்ஷபாப் நிறுவனத்தின் அனுசரனையுடன் இவ்வருடம் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை எழுதிய முஸ்லிம் மாணவிகளுக்கான இஸ்லாமிய கருத்தரங்கு மஃஹதுஸ் ஸுன்னா மகளிர் அரபுக் கல்லூரி வளாகத்தில் 29-12-2013 இன்று ஞாயிற்றக்கிழமை காலை தொடக்கம் மாலை வரை இடம்பெற்றது.
இங்கு இஸ்லாம் ஒரு பூரண வாழ்க்கைத் திட்டம் எனும் தலைப்பில் மஃஹதுஸ் ஸுன்னா மகளிர் அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் செய்னுலாப்தீன் மதனியும், இஸ்லாம் கூறும் ஹிஜாப் ஆடை ஏன் ? எதற்காக? எனும் தலைப்பில் மஃஹதுஸ் ஸுன்னா மகளிர் அரபுக் கல்லூரியின் பிரதி அதிபர் அஷ்ஷெய்க் எம்.எம்.மன்சூர் மதனியும்,முஸ்லிம் மாணவர்கள் எதிர்நோக்கும் ஓழக்க பண்பாடு தொடர்பான பிரச்சினைகளும் தீர்வுகளும் எனும் தலைப்பில் மௌலவியா சில்மியா தாரிக்;கும்,முன்மாதிரியான முஸ்லிம் மாணவிகள் கடைப்பிடிக்க வேண்டிய பண்புகள் எனும் தலைப்பில் மஃஹதுஸ் ஸுன்னா மகளிர் அரபுக் கல்லூரியின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.சீ.எம்.றிஸ்வான்(மதனியும் விரிவுரைகளை நிகழ்த்தினார்கள்.
இதன் போது மாணவிகளுக்கு முஸ்லிம்களின் 1001 கண்டுபிடிப்புக்கள் எனும் வெண்திரைக் காட்சியும் காண்பிக்கப்பட்டதுடன் இஸ்லாமிய கருத்தரங்கில் பங்குபற்றிய மாணவிகளுக்கு சான்றிதழும் பரிசும் வழங்கி வைக்கப்பட்டது.
இக் கருத்தரங்கில் லஜ்னதுஸ்ஸூன்னா அந்தபவிய்யா அமைப்பின் தஃவா குழு இணைப்பாளர்களான அஷ்ஷேய்க் ஜிப்ரி (மதனி), அஷ்ஷேய்க் பஷீர் (மதனி), லஜ்னதுஸ்ஸூன்னா அந்தபவிய்யா அமைப்பின் பொருளாளர் அஷ்ஷேய்க் எஸ்.எம்.பி.எம்.அன்ஸார் (மதனி),லஜ்னதுஸ்ஸூன்னா அந்தபவிய்யா அமைப்பின் உப செயலாளர் ஏ.எம்.எம்.அன்ஸார் (மதனி) உட்பட மஃஹதுஸ் ஸுன்னா மகளிர் அரபுக் கல்லூரி ஆசிரிய ஆசிரியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
Published by

Leave a comment