– டீன் பைரூஸ்
காத்தான்குடி: காத்தான்குடி அல்-குர்ஆன் மதரஸாக்கள் அபிவிருத்தி சபையினால் வருடா வருடம் நடாத்தப்பட்டு வரும் அல்-குர்ஆன் இறுதிப் பரீட்சையின் மூன்றாம் நாள் (09.12.2013 ஞாயிற்றுக்கிழமை) இன்று புதிய காத்தான்குடி 06 நுாறாணிய ஜம்ஆ பள்ளிவாயலில் நடை பெற்றது.
மேற்படி பரீட்சை ஆறு நிலையங்களில் (மஸ்ஜிதில்) நடை பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.சென்ற 07.12.2013 ல் ஆரம்பமான இப்பரீட்சை எதிர் வரும் 12.12.2013 வரையில் நடைபெற உள்ளது.காத்தான்குடியின் சங்கைமிக்க ஹாபி்ழ்-உலமாக்களினால் மேற்படி பரீட்சை நடாத்தப்பட்டு வருகின்றது.
இன்று காலை நுாறாணிய ஜம்ஆ பள்ளிவாயலில் நடைபெற்ற பரீட்சையினை பார்வையிட காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவணங்களின் தலைவா் அல்ஹாஜ்.எம்.டீ.எம்.காலித் jp அவா்களும் சமூகமளித்திருந்தார்.
பரீட்சை நிலையங்கள்.
1.ஜாமியுழ்ழாபிரீன் பெரிய ஜூம்ஆ பள்ளிவாயல் காத்தான்குடி 05
2.பதுரியா ஜூம்ஆ பள்ளிவாயல் புதிய காத்தான்குடி
3.நுாறாணியா ஜூம்ஆ பள்ளிவாயல் புதிய காத்தான்குடி 06
4.மீரா பெரிய ஜூம்ஆ பள்ளிவாயல் காத்தான்குடி 01
5.முகைதீன் மெத்தை ஜூம்ஆ பள்ளிவாயல் காத்தான்குடி 03
6.சிகரம் ஜூம்ஆ பள்ளிவாயல் சிகரம் ஆரயம்பதி.
Published by







Leave a comment