மன்னார்: மன்னார் தல்லாடி பிரதான வீதியூடாக மன்னாரை நோக்கி பயணித்து கொண்டிருந்த பார ஊர்தி ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை மன்னார் பிரதான பாலப்பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த பாரஊர்தி கட்டுப்பாட்டை இழந்த நிலையில் பாதையிலிருந்து விலகி பள்ளத்திற்கு சென்றுள்ளது. எனினும் பாதையின் ஓரங்களில் அமைக்கப்பட்டிருந்த தூண்களில் இடிபட்டு பாதையில் இருந்த முற்றும் முழுவதுமாக விலகாமல் பாரிய விபத்து தடுக்கப்பட்டுள்ளது.குறித்த விபத்தின் போது குறித்த வாகனம் பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.ஆனால் எவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை. VK
Published by

Leave a comment