காத்தான்குடி: 2012, 2013ம் ஆண்டுகளில் 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு 02.12.2013 அன்று கல்லூரியின் முதல்வர் அல்ஹாஜ் ULA. முபாறக் (SLPS) அவர்களின் தலைமையில் கல்லூரியின் நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் திரு. AM. அஹமட்லெப்பை (SLEAS) அவர்களும் சிறப்பு அதிதயாக காத்தான்குடி பிரதேச கல்விப் பணிப்பாளர் அல்ஹாஜ் SMM. சுபைர் (SLPS) அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள். இந்நிகழ்வில் 2012ம் ஆண்டில் சித்தியடைந்த 16 மாணவர்களுக்கும் 2013ம் ஆண்டில் சித்தியடைந்த 11 மாணவர்களுக்கும் கற்பித்த ஆசிரியர்களுக்கும் கௌரவமளிக்கப்படதுடன் புலமைப்பரிசில் பரீட்சையில் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றவர்களும் பரிசில்கள் வழங்கி பாராட்டப்பட்டனர்.
Mr.MTM.Shareek
Teacher
BT/Kattankudy Central College

Leave a comment