கொழும்பு: நாட்டில் ஆண்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், பெண்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2012 ஆம் ஆண்டுக்கான குடிசன மதிப்பீட்டில் 100 ஆண்களுக்கு, 94 பெண்கள் என்ற நிலையில் காணப்படுவதாக அத்திணைக்கள பணிப்பாளர் நாயகம் டீ.சீ.ஏ. குணவர்தன தெரிவித்தார்.
குடிசன மதிப்பீட்டின் 05 வீதத்தினை அடிப்படையாகக் கொண்ட தரவுகளுக்கு அமையவே, இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக டீ.சீ.ஏ.குணவர்தன மேலும் குறிப்பிட்டார்.
Leave a comment