காங்கேயனோடையில் அபிவிருத்தித் திட்டங்கள் மக்கள் பாவனைக்காக பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் திறந்து வைப்பு

unnamed (4)முகம்மட் சஜி

காங்கேயனோடை: காங்கேயனோடை கிராமம் கடந்த கால யுத்தம் மற்றும் வெள்ள அனர்த்தங்களினால் பெரிதும் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதனடிப்படையில் மட்டக்களப்பு காங்கேயனோடையில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் மக்கள் பாவனைக்காக பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் நேற்று முந்தினம் கையளிக்கப்பட்டது.

பிரதேச அபிவிருத்தக் குழுவின் தலைவர் எம்.எம்.முஜாகித் தலைமையில் இடம்பெற்ற வைபவத்தில் டயடகிருள ஜய்க்கா திட்டத்தின் மூலம் அமைக்கப்பட்ட கொங்ரீட், கிறவல், தார், பொருத்துக்கள் உள்ளிட்ட 6 வடிகானுடன் கூடிய வீதிகளும் அடிப்படை வசதிகள் கொண்ட கட்டிடங்களும் குடி நீர் இணைப்புக்களும் கலகங்களுக்கான பொருட்களும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.எ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் பங்கு பற்றுதலுடன் பொது மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. 

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment