காத்தான்குடி: கிழக்கிலங்கை ஸாஹிறா வலது குறைந்தோர் கல்லூரிக்கு பல்லாண்டு காலமாக பணியாற்றிய சமூக சேவையாளர்கள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் சமீபத்தில் கௌரவிக்கப்பட்டனர். ஸாஹிறா வலது குறைந்தோர் கல்லூரியின் பணிப்பாளர் எம்.எச்.எம்.பசீர் தலைமையில் இடம் பெற்ற வைபவத்தில் பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டு இவ் சமூக சேவையாளர்களை கௌரவித்தார்.
நிகழ்வில் கிழக்கு மாகான சபை உறுப்பினர் எம்.எப்.எம்.சிப்லி, பிரதிக்கல்விப்பணிப்பாளர் எஸ்.சிரீதரன் நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Leave a comment