ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த தினத்தை முன்னிட்டு கிழக்கு மாகாண விவசாய அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘தயட்ட செவண’ தேசிய மரநடுகை விழா 15.11.2013 வெள்ளிக்கிழமை கிழக்கு மாகாண அமைச்சுக்குரிய நிர்வாக வளாகத்தில் கிழக்கு மாகாண விவசாய கால்நடை .அபிவிருத்தி, மீன்பிடி,கைத்தொழில் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரும் ‘லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சவூதி நாட்டின் முன்னாள் பிரதி விவசாய அமைச்சரும், தனியார் மீன்பிடி நிருவனத்தின் நிறைவேற்று பணிப்பாளருமான பொறியியலாளர் முஹமட் அல் ஜாபர் அஹீலி, கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் ஆரியவதி கலப்பதி, பிரதிப்பிரதம செயலாளர், மாகாண அமைச்சின் செயலாளர் உட்பட உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இதன்போது மரக்கன்றுகள் நாட்டப்பட்டதுடன் அதிதிகளின் உரையும் இடம்பெற்றது.

Leave a comment