பாலமுனை: பாலமுனை பிரதேசத்தில் அப்பிரதேச புதிய வீட்டுத்திட்ட பள்ளிவாயலுக்கு பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் ஒலிபெருக்கி சாதனங்கள் வழங்கிவைக்கப்பட்டது. ஹிறா பௌன்டேசனின் நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட இப்பொருட்களை பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டு வழங்கிவைத்தார்.
பாலமுனை பிரதேச அபிவிருத்திக் குழுவின் தலைவர் முகம்மட் முபாரக் தலைமையில் இடம் பெற்ற வைபவத்தில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ், கிழக்கு மாகான சபை உறுப்பினர் பொறியியலாளர் எம்.எப்.எம்.சிப்லி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Leave a comment