திருகோணமலை: சென் ஜோன்ஸ் படையணியினரின் 2011 மற்றும் 2012 ம் ஆண்டிற்கான தேசிய பாசறையில் வெற்றியீட்டிய திருகோணமலை மாவட்ட படையணியிற்கான தங்கப்பதக்கம் அணிவிப்பதும் பாரட்டு நிகழ்வும் திருகோணமலை புனித ஜோசப் கல்லூரியில் கடந்த 13.11.2013ஆம் திகதி இடம்பெற்றது.
இந்நிகழ்வில் திருக்கோணமலை மாவட்ட சென் ஜோன்ஸ் படையின் புதிய மாவட்ட ஆணையாளர் பதவியேற்றதுடன் முன்னாள் மாவட்ட ஆணையாளருக்கான பிரியாவிடை வைபவமும் கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு விருந்தினர்களாக திருக்கோணமலை வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.என்.விஜேந்திரன், மாகாணசபை உறுப்பினர் திரு.சி.தண்டாயுதபாணி, திரு.ஜெ.ஜெனார்த்தனன், சென் ஜோன்ஸ் படையணி செயற்குழுத் தலைவர் திரு.எஸ்.ரட்ணவடிவேல் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
![job7[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/11/job71.jpg?w=150&h=84)
![j4[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/11/j41.jpg?w=780&h=438)
![job[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/11/job1.jpg?w=780&h=486)
![job7[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/11/job71.jpg?w=780&h=438)
Leave a comment