கொழும்பு: பொது நலவாய அரச தலைவர்களின் மாநாட்டுக்கு இணைவாக இரத்தினக் கற்கள் மற்றும் தங்க நகைகளின் கண்காட்சி யொன்று நாளை 13 ஆம் திகதி முற்பகல் 11.00 மணிக்கு கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் நடைபெறும்.
‘த ப்ளூ காஸல்” என்ற பெயரில் நடைபெறவுள்ள இக்கண்காட்சியை தேசிய இரத்தினக் கற்கள் மற்றும் தங்க நகைகள் அதிகார சபை ஏற்பாடு செய்துள்ளது.
முதற்பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷவினால் திறந்துவைக்கப்படவுள்ள இக்கண்காட்சி இம்மாதம் 16 ஆம் திகதி வரையில் நடைபெறும். முக்கிய அமைச்சர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொள்வர். lk
Leave a comment