கல்முனை: கல்முனை மாநகர மேயர் பதவியிலிருந்து சிராஸ் மீராசாஹிப் இன்று காலை இராஜினாமாச் செய்துள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்று காலை கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமைச் சந்தித்த சிராஸ் மீராசாஹிப் தனது இராஜினாமாக் கடிதத்தை கையளித்ததாகவும் இருவரும் ஒருவரையொருவர் கட்டித் தழுவிக் கொண்டதாகவும் தெரியவருகிறது.
இது தொடர்பில் இன்று பிற்பகல் கொழும்பிலுள்ள கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் இடம்பெறவுள்ள விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் விரிவாக விளக்கமளிக்கப்படும் என கட்சியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Leave a comment