மட்டக்களப்பு: மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிட்குட்பட்ட வலையிறவு பால மற்றும் ஆயித்தியமலை பால திறப்பு விழாக்களுக்கு வவுணதீவு பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவரும் மீள்குடியேற்ற பிரதியமைச்சருமான விநாயகமூர்த்திமுரளிதரனைஅழைக்காததைக் கண்டித்துமாவட்டத்தில் சில இடங்களில் பதாதைகள் (பெணர்) தொங்கவிடப்பட்டுள்ளன.
‘மட்டு மாவட்ட அபிவிருத்திக்கு முன்னின்று உழகை;கின்ற அம்மான் எங்கே? மாவட்டஅமைச்சருக்கு அழைப்பில்லாமல் திறப்புவிழாவா’ ‘மட்டக்களப்பின் பிரதிநிதித்துவத்தை பறித்தது யார்’ உள்ளிட்ட வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகள் மட்டக்களப்பு மாவட்ட மீனவர்கள்,மட்டு மாவட்ட வர்த்தகர்கள்,மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி ஒன்றியம் என பெயர் குறிப்பிடப்பட்டு தொங்கவிடப்பட்டுள்ளன.
இதேவேளை இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்றும் இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு வலையிறவுப் பாலத்திற்கு அருகாமையிலும் குறித்த பெணர் தொங்கவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



Leave a comment