சர்வதேச பிறை அடிப்படையில் இன்று இலங்கையில் ஹஜ் பெருநாள் தொழுகை

– பழுலுல்லாஹ் பர்ஹான்

DSC01944[1]காத்தான்குடி: உலக முஸ்லிம்களின் இரண்டு பெருநாள் தினங்களில் தியாத்தை வலியுறுத்தும் பெருநாளான புனித ஈதுல் அழ்ஹா ஹஜ் பெருநாளை இன்று உலக முஸ்லிம்கள் கொண்டாடிவருகின்றனர். இலங்கையில் சர்வதேச பிறை அடிப்படையில் ஹஜ் பெருநாள் தொழுகை மற்றும் குத்பாப் பிரசங்கம் என்பன 15-10-2013 இன்று செவ்வாய்க்கழமை கொழும்பு,புத்தளம்,அக்கறைப்பற்று ,காத்தான்குடி,நீர் கொழும்பு ,ஹபுகஸ்தலாவ உட்பட பல பிரதேசங்களில் இடம்பெற்றது.

இதற்கமைவாக காத்தான்குடி தாருல் அதர் அத்தஅவிய்யா ஏற்பாடு செய்த ஈதுல் அழ்ஹா ஹஜ் பெருநாள் தொழுகை இன்று செவ்வாய்க்கிழமை காலை 6.30 மணிக்கு காத்தான்குடி ஏத்துக்கால் கடற்கரை முன்றலில் நடைபெற்றது. இதில் பெருநாள் தொழுகையையும் குத்பாப் பிரசங்கத்தையும் மௌலவி அஷ்ஷெய்க் அஸ்பர்(பலாஹி) நிகழ்த்தினார்.

இதில் ஆண் பெண் அடங்கலாக சுமார் 1500 மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டதாக தாருல் அதர் அத்தஅவிய்யா அமைப்பின் தலைவர் ரஊப் தெரிவித்தார்.

சர்வதேசப் பிறை அடிப்படையில் தியாகத் திருநாள் ஈதுல் அல்ஹா புனித ஹஜ்ஜுப் பெருநாளை இலங்கை நாட்டின் பல பாகங்களிலும் முஸ்லிம்கள் கொண்டாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

DSC01895[1]

DSC01931[1]

DSC01944[1]

asfar

Published by

2 responses to “சர்வதேச பிறை அடிப்படையில் இன்று இலங்கையில் ஹஜ் பெருநாள் தொழுகை”

  1. ur kattankudy inaya anparhalukku perunal vaalthukkal. ITHUL ALHA.

    1. நன்றி. உங்களுக்கும் இனிய ஈத் முபாரக் நல்வாழ்த்துக்கள்!

Leave a reply to NAJA AHMED Cancel reply