மட்டக்களப்பு: மட்டக்களப்பு பல்சமய கருத்தாடல் நிலையம் (IFDC), கல்லடி RKM விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலயத்துடன் இணைந்து 2013ம் வருட உலக சமாதான தினத்தை முன்னிட்டு (23.09.2013) அண்மையில் அவ்வித்தியாலய பிரதான மண்டபத்தில் மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு மத்தியில் ‘சமாதான சகவாழ்வின் முக்கியத்துவம்’ எனும் தொனிப்பொருளில் கலந்துரையாடல் நிகழ்வொன்றை நடாத்தியது.
இந்நிகழ்வில் சமயங்களின் பார்வையில் சமாதான சகவாழ்வின் முக்கியத்துவம் குறித்து அதிதிகளாகக் கலந்து சிறப்பித்த சதுர்ஜானந்த சுவாமிஜீ, அருட்தந்தை டொமினிக் சாமிநாதன் மற்றும் அஷ்ஷெய்க் எம்.பி.எம். பிர்தௌஸ் நளீமி ஆகியோர் கருத்துரைகளை வழங்கினர். அத்துடன் பாடசாலை மாணவிகளின் சமாதான சகவாழ்வு தொடர்பான நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

Leave a comment