காத்தான்குடி: காத்தான்குடி பிரதேச செயலகத்தின் புதிய இளைஞர் சேவை உத்தியோகத்தராக கல்முனையை பிறப்பிடமாகக் கொண்ட எம்.எம்.ஸமீலுல் இலாஹி நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே காத்தான்குடி பிரதேச செயலகத்தின் புதிய இளைஞர் சேவை உத்தியோகத்தராக கடமையாற்றிய முஹம்மட் றம்ஸி ஏறாவூர் பிரதேச செயலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதையடுத்து கடந்த 02ம் திகதி முதல் புதிதாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் இதற்கு முன்னர் ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் இளைஞர் சேவை உத்தியோகத்தராக கடமை புரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Leave a comment