காத்தான்குடி: உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு காத்தான்குடி ஸபா சர்வதேச பாடசாலையின் ஏற்பாட்டில் சிறுவர் கண்காட்சியோன்று நேற்று 01-10-2012 நேற்று செய்வாய்க்கிழமை கா-குடி ஸபா சர்வதேச பாடசாலையில் ஆரம்பமானது. பெற்றோர்களின் பூரண பங்களிப்போடு இடம்பெற்ற இச் சிறுவர் கன்காட்சியில் பெரும் தொகையிலான சிறுவர், சிறுமிகளும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
கடந்த 13 வருடங்களாக காத்தான்குடியில் இயங்கும் ஸபா சர்வதேச பாடசாலை ஆங்கிலம் ,தமிழ் ஆகிய மொழிகளில் கற்பித்தலை மேற்கொள்வதில் முன்னனியில் திகழ்கின்றது.
இவ் ஸபா சர்வதேச பாடசாலையின் பணிப்பாளராக ஏ.சி.பி.எம். தலைவர் எம். ஏ. சி. எம். ஜவாஹிர் கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment