காத்தான்குடி: பொருளாதார அபிவிருத்திப் பிரதி அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இன்று ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு பயணமானார். உல்லாசப் பயணத்துறையை ஊக்குவிக்கும் நோக்குடனேயே டுபாய் வர்த்தக சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ள வர்த்தகர்கள் வர்த்தகக் கூட்டின் உரிமையாளர்கள் போக்குவரத்து முகவர்கள் மற்றும் வர்த்தக பிரமுககர்களை சந்திப்பதற்கான விசேட மகாநாடு டுபாய் வர்த்தக சம்மேளத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாளை டுபாய் பிரமிட் ஹோட்டலில் இடம்பெறவுள்ள இம்மகாநாட்டில் இலங்கையின் சார்பில் கலந்துகொள்வதற்காக கௌரவ பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச அவர்களின் சார்பில் அவரின் பிரதிநிதியாக பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் இம்மகாநாட்டில் கலந்துகொள்கிறார். இந்த சந்திப்பின்போது இலங்கையின் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்புக்கள் அதிலுள்ள பிரச்சினைகள் அங்குள்ள முதலீட்டாளர்கள் இங்கு முதலீடு செய்வதில் உள்ள சிக்கல்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் போன்ற பல்வேறுபட்ட தலையீடுகள் தொடர்பாக முதலீட்டாளர்களுடன் கலந்துறையாட இருக்கிறார்.
அதனை தொடர்ந்து இலங்கை ஹோட்டல் கல்லூரியை பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்குகின்ற ஹோட்டல் பாடசாலையை எமரேட்ஸ் ஹோட்டல் பல்கலைக்கழகத்துடன் இணைத்துக்கொள்வதற்கான பேச்சு வார்த்தைகளில் நாளை மாலை ஈடுபடவுள்ளார். ஜிமைரா போரத்தினுடைய பிரதம நிறைவேற்று அதிகாரி எமரேட்ஸ் பல்கலைக்கழகத்தினுடைய பணிப்பாளர்களை நாளை மாலை சந்தித்து இலங்கை ஹோட்டல் பாடசாலையை எமரேட்ஸ் ஹோட்டல் பல்கலைக்கழகத்துடன் இணைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் இடம்பெறவுள்ளார்.
ஆதனை தொடர்ந்து பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் 1ம் திகதி அபுதாபி வர்த்தக சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ள மேற்படி கூட்டத்தில் கலந்துகொள்வார். வர்த்தக சம்மேளனம் ஹோட்டல் உரிமையாளர்களுடன் சந்திக்கவுள்ளார். இந்த சந்திப்பின்போது அபுதாபி முதலீட்டாளர்கள் இலங்கையிலிருந்து முதலீடு செய்வதிலுள்ள பிரச்சினைகள் விளையாட்டுத்துறை போன்ற துறைகளில் அவர்களை முதலீடு செய்யுமாறு பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள் விடுப்பார்.
இதற்கான சகல ஏற்பாடுகளையும் இலங்கைக்கான டுபாய் நாட்டுத் தூதுவர் இலங்கையினுடைய தூதுவர் டொக்டர் மஹிந்தபால சூரிய, டுபாய் ஜென்றல் ஜனாப் எம்.எம். அப்துல் றஹீம் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதாகவும் இரண்டு தினங்கள் தங்கியிருந்து இந்நிழ்வுகளில் பங்கேற்க இருப்பதாக பிரதிஅமைச்சர் ஹிஸ்புல்லாஹ் இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்ததாக பிரதிஅமைச்சரின் ஊடக செயளாளர் முகம்மட் சஜி தெரிவித்தார்.

Leave a comment