ஏறாவூர்: கிழக்கு மாகாண சபை விவசாய கால்நடை அபிவிருத்தி அமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட், கிழக்கு மாகாண அமைச்சராகப் பதவியேற்று ஒருவருட பூர்த்தியினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளருடனான சந்திப்பு ஏறாவூரில் அமைந்துள்ள உத்தியோக பூர்வ இல்லத்தில் நேற்று (27) நடைபெற்று.
இந்நிகழ்வின்போது மட்டக்களப்பு மாவட்டத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மற்றும் முஸ்லிம் ஊடகவியலாளர்கள் பலர் கலந்து கொண்டனர். இதில் அமைச்சரது ஒருவருட காலத்தில் ஏற்பட்ட அனுபவங்கள் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள செயற்றிட்டங்கள் போன்ற பல விடயங்கள் பற்றிக் கலந்துரையாடப்பட்டன.


Leave a comment